×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னாள் கிரிக்கெட் வீரரை கொடூரமாக அடித்தே கொன்ற மகன்! வெளியான திடுக்கிடவைக்கும் பின்னணி!

Son killed ex crictet player in kerala

Advertisement

கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயமோகன் தம்பி. இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஆவார். மேலும் இவர் ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளார்.  இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரது மனைவி உயிரிழந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த ஜெயமோகன் தம்பி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

இவரது மூத்த மகன் அஸ்வின். இவர் பணதேவைக்காக அவரது தந்தையை சார்ந்து இருந்துள்ளார். தந்தையின் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மதுபோதையில் இருந்த தனது மகனிடம் ஜெயமோகன் தம்பி ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர் தந்தையை முகத்தில் குத்தி, தலையை  சுவற்றில் மோதி கொடூரமாக அடித்தே கொன்றுள்ளார்.

பின்னர் தந்தை இறந்தது கூட தெரியாமல், மதுபோதையில் இருந்த அஸ்வின் அவரது சடலத்தின் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயமோகன் தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதனை தொடர்ந்து போலீசார் அஸ்வினிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தான் மது போதையில் இருந்ததால் தனக்கு எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார். பின்னர் தனது தந்தையை தான்தான் கொன்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket player #Murder #KERALA
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story