×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்ப பார்த்தாலும் சும்மா நொச்சு, நொச்சுனு படுத்தாதே.,மாமியாரை மாடியிலிருந்து தள்ளிய மருமகன் .பின் என்ன நேர்ந்தது தெரியுமா?

எப்ப பார்த்தாலும் சும்மா நொச்சு, நொச்சுனு படுத்தாதே.,மாமியாரை மாடியிலிருந்து தள்ளிய மருமகன் .பின் என்ன நேர்ந்தது தெரியுமா?

Advertisement

மகாராஷ்டிராவில் நபர் ஒருவர் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியாரை,மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்தவர் அன்குஷ் பத்தி.இவரது மனைவியால் வாய் பேச முடியாது, காதும் கேட்காது.  இதனால் அடிக்கடி அன்குஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்றும் அன்குஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். 

அப்போது அங்கு அன்குஷின் மாமியார் வந்துள்ளார்.அவர்  தனது மகள் கணவரால் துன்புறுத்தபடுவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.

 இதனையடுத்து அவர் அன்குஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு அன்குஷும் தனது மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . பின்னர் ஆத்திரமடைந்த அன்குஷ் தனது மாமியாரை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அவரது மாமியார் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.
 
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக அன்குஷ் மீது வழக்குப்பதிவு செய்து ,கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#son in law #killed #pull down #1st floor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story