×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்ற தாயை மகனே வன்கொடுமை செய்த கொடூர செயல்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

கர்நாடகா மாநிலத்தில் தாயை வன்கொடுமை செய்து, கொலை செய்த மகனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் ஹாவே மாவட்டம் வனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண் பாரவ்வா. இவருக்கு  சிவப்பா என்ற 21 வயது மகன் உள்ளார். 15 வருடங்களுக்கு முன்பே பாரவ்வாவின் கணவர் உயிரிழந்துவிட்டதால் அவர் அதே பகுதியில் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விவசாயக் கூலியாக வேலை செய்து வரும் பாரவ்வாவை பற்றி அவரது மகன் சிவப்பாவிடம், சிலர் உன்னுடைய தாய் பலருடன் நெருக்கமாக இருப்பதாக கூறி வந்துள்ளனர். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே பலமுறை சண்டை இருந்து வந்துள்ளது. 

இந்தநிலையில் வேறு ஒருவருடன் இருக்கும் உறவை முறித்துக் கொள்ளுமாறு தாயை வற்புறுத்தியுள்ளார் சிவப்பா. இதனை அவரது தாய் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த வாரம் சிவப்பாவின் தாய் பாரவ்வா வயல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். 

அப்போது வீட்டுக்கு திரும்பிய பாரவ்வாவை மது அருந்தச் சொல்லி அவருடைய மகன் சிவப்பா கட்டாயப்படுத்தியுள்ளார். அவரை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் சிவப்பா கொலை செய்துள்ளான்.

இந்தநிலையில் பாரவ்வாவின் சகோதரி அவரை தேடி அலைந்தபோது,  பாரவ்வா வயல்வெளியில் பிணமாக கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் போலீசார் சிவப்பாவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அனைத்து உண்மையும் வெளியானது. இதனையடுத்து சிவப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #mom #son
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story