குடிப்போதையில் கருநாக பாம்புடன் சண்டையிட்ட நபர்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
Snake rajasthan

ராஜஸ்தானில் தவ்சா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடிபோதையில் சுயநினைவின்றி இருந்த போது கருநாக பாம்புடன் சண்டையிடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த நபர் நன்கு குடித்து விட்டு வலுக்கட்டாயமாக கரு நாகப்பாம்பினை சண்டைக்கு இழுத்துள்ளார். அந்த பாம்பு அவரை படம் எடுத்தப்படியே நின்றுள்ளது. அதனை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த பாம்பு அவரை கொத்தி உள்ளது.
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் அந்த நபர் அந்த பாம்பை எடுத்து துண்டு போல கழுத்தில் சுற்றியும் வம்பிழுத்துள்ளார். தொடர்ந்து கடித்து வந்த பாம்பு கடைசியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.