தூங்கும்போது பேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு! பதறிப்போன இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்!
Snake in young man pant
உத்திர பிரதேசம் மாநிலம் மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், பணியை முடித்த தொழிலாளி ஒருவர் நன்கு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது திடீரென பாம்பு ஒன்று அந்த தொழிலாளியின் பேண்ட்டிற்குள் புகுந்துள்ளது. மேலும் அசைந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில் சுமார் 7 மணி நேரம் அங்கிருந்த தூணை பிடித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்தார். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். இதனால் அந்த நபரும் மரண பயத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவைக்கப்பட்டார். பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக கழட்டி பாம்பை வெளியே கொண்ட வர போராடினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362