×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்.! அதிர்ச்சி காரணம்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்.! அதிர்ச்சி காரணம்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் வான்மோர் என்பவரின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அககம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தளர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் 6 பேரும் மற்றொரு அறையில் 3 பேரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இறந்து கிடந்தவர்கள் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரிய வரும். போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#6 people #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story