அக்கா, தங்கை இருவரையும் கடத்தி இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்! திரிபுராவில் நடந்த கோர சம்பவம்
sisters got raped in tripura
திரிபுராவில் 13 வயது சிறுமியை அவரது அக்காவும் ஆட்டோ ஓட்டுனரால் கடத்தப்பட்டு மூன்று நபர்கள் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம், உனகோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த 13 வயது சிறுமியும் அவரது அக்காவும். இவர்கள் இருவரும் கடந்த கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை அகர்தலாவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைலாஷ்கர் என்னுமிடத்தில் உள்ள பாலத்தில் வீட்டிற்குச் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 34 வயதை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவில் வந்துள்ளார். அந்த சிறுமிகள் இருவரும் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் செல்லும் வழியில் தன்னுடைய நண்பர்கள் இருவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார்.
அப்போது அந்த சிறுமிகளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தன் நண்பர்களின் உதவியால் ஆட்டோ ஓட்டுனர் சிறுமிகளின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளனர். மேலும் அந்த சிறுமிகளை ஹோவாய் மாவட்டத்தில் உள்ள தெளியமுற என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமிகளை ஒரு அறையில் அடைத்து வைத்து இரண்டு நாட்களாக மூவரும் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து கற்பழித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளை தெளியமுற ரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மூவரும் தப்பி ஓடிவிட்டனர். ரயில்வே நிலையத்தில் இருந்த ரயில்வே காவல்துறையினர் மூலம் அந்த சிறுமிகள் அந்தப் பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சிறுமியின் பெற்றோர் நவம்பர் 12ஆம் தேதி காவல் நிலையத்திற்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.