×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நட்பாக பழகி, கத்தி முனையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காம சகோதரர்கள்.. பேரதிர்ச்சி சம்பவம்.!

கத்தி முனையில் ஒரு பலாத்காரம்.. இரட்டை சகோதரர்கள் அதிரடி கைது..!

Advertisement

மும்பையில் உள்ள தாராவியில் இளம்பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பை வில்லே பார்லே பகுதியில் வசித்து அந்த சகோதரர்கள் அனில் சோகன் மற்றும் அவரது சகோதரர் நிலேஷ் சோகன் இருவரும் தாராவி பகுதியில் வசித்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணிடம் சகோதரர்கள் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. ஒருநாள் அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட சகோதரர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை இருவரும் சேர்ந்து கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வீடியோவாக பதிவு செய்து கொண்ட சகோதரர்கள், இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால், அல்லது காவல்துறையிடம் தெரிவித்தாலும் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்த இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில் அவர்களின் தொல்லை அதிகரித்ததால் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சகோதரர்கள் இருவரையும் தேடி வந்தனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்மூலம் மும்பையில் பதுங்கி இருந்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #sexual abuse #Dharavi #Mumbai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story