கேரளா ஹோட்டல் அதிபர் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்... காதலியை பயன்படுத்தி... காதலன் திட்டம்!
கேரளா ஹோட்டல் அதிபர் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மை... காதலியை பயன்படுத்தி... காதலன் திட்டம்!
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோட்டல் அதிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் சிபில்(19) ஆஷிக்(23) மற்றும் பர்ஹானா (18) ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல துடிக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
மலப்புரத்தைச் சார்ந்த சித்திக் கோழிக்கோடு நகரில் உள்ள எலத்திபாலத்தில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இவரது ஹோட்டலில் தான் சிபில் ஆஷிக் மற்றும் பர்ஹானா ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் திட்டம் போட்டு உரிமையாளரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பறிக்க சதி செய்துள்ளனர். அந்தத் திட்டம் தவறாக போய் தற்போது கொலையில் முடிந்திருக்கிறது.
ஹோட்டல் அதிபரான சித்திக்கும் பர்ஹானாவின் தந்தையும் வெளிநாட்டில் வைத்தேன் நண்பர்களாக இருந்துள்ளனர். இதன் காரணமாக சித்திக் பர்ஹானா
இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ள தொடர்பாக மாறியிருக்கிறது. மேலும் பர்ஹானா சிபில் என்பவரை தான் காதலித்து வந்துள்ளார். சிந்திக்கும் தனக்கும் இருக்கும் தொடர்பை பயன்படுத்தி அவரை மிரட்டி 5 லட்ச ரூபாய் படிக்க திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் சித்திக் அந்த பணத்தை கொடுக்க மறுத்திருக்கிறார்.
அப்போது சிபில் மற்றும் ஆஷிக் ஆகியோர் அங்கு வரவே வாக்குவாதமுற்றி கொலையில் முடிந்திருக்கிறது. பின்னர் அவரது உடலை என்ன செய்வது என்று தெரியாமல் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசி இருக்கின்றனர். மேலும் இந்தக் கொலையில் கைது செய்யப்பட்ட மூவரும் எம்.டி.எம்.ஏ என்ற கொடிய போதை புழக்கத்திற்கு அடிமையானவர்கள் என காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362