×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி சம்பவம்..! குடித்துவிட்டு ரகளை செய்த மகன்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் வெட்டி கொலை.!

அதிர்ச்சி சம்பவம்..! குடித்துவிட்டு ரகளை செய்த மகன்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் வெட்டி கொலை.!

Advertisement

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உகார் புத்துரகா பகுதியில் வசித்து வருபவர் சென்னப்பா கான்ஜி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவரது கடைசி மகன் சேத்தன் கான்ஜி குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சேத்தன் கான்ஜி தனது தாய் மற்றும் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் மது குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சென்னப்பாக கான்ஜி வீட்டில் இருந்த கோடாரியால் மகன் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சேத்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். இதனையடுத்து காவல் நிலையம் சென்று தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறி சென்னப்பா சரணடைந்துள்ளார்.

இதனைதொடர்ந்து மகனை கொலை செய்த சென்னப்பாவை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #son killed #Father Arrested #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story