அதிர்ந்தது கேரளா... 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... கைதான வடமாநில தொழிலாளர்.!
அதிர்ந்தது கேரளா... 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... கைதான வடமாநில தொழிலாளர்.!
கேரள மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதிக்கு அருகே உள்ள தைகட்டுக்காரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காணாமல் போனார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.