×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திக்குவாய் சிகிச்சைக்கு வந்த சிறுவன்... ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்... இந்து அமைப்பு கொடுத்த புகார்.!

திக்குவாய் சிகிச்சைக்கு வந்த சிறுவன்... ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்... இந்து அமைப்பு கொடுத்த புகார்.!

Advertisement

உத்தரபிரதேச மாநிலத்தில் திக்குவாய் பிரச்சனைக்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தைக்கு ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த மருத்துவமனைக்கு எதிராக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி நகரில்  எம்.கான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தங்கள் குழந்தைக்கு இருக்கும் திக்குவாய் பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக பெற்றோர் தங்கள் குழந்தையுடன் சென்று இருக்கின்றனர்.

இந்தத் திக்குவாய் பிரச்சினை தொடர்பாக  குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் மருத்துவர் கூறி இருக்கிறார். ஆனால் குழந்தையின் ஆணுறுப்பில் சுன்னத் செய்து முன் தோலை நீக்கி இருக்கிறார். இது அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மருத்துவர் சுன்னத் அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு எதிராகவும் மருத்துவருக்கு எதிராகவும் அந்தக் குழந்தையின் பெற்றோர் மற்றும் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் மருத்துவமனைக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #UttarPradesh #Crime #falsesurgery #protest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story