×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி... வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு.! ஆண் நண்பருக்கு வலைவீச்சு.!

அதிர்ச்சி... வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு.! ஆண் நண்பருக்கு வலைவீச்சு.!

Advertisement

ஹைதராபாத் நகரை சேர்ந்த இளம் பெண் உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் புகார் அளித்திருக்கிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு அந்தப் பெண்ணை வரவேற்ற அவரது நண்பரான மாணிக் சர்மா என்பவர் ஜான்கிபுரம் என்ற பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்

.இதனைத் தொடர்ந்து மறுநாள் அறைக்கு வந்த மாணிக் சர்மா மற்றும் அவரது நண்பர்களான துக்காராம் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண் ஜான்கிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் ஜான்கிபுரம் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண் நண்பர் வேலை வாங்கி தருவார் என்ற நம்பி சென்ற பெண் இவ்வாறு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #Jankipuram #Sexual assault #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story