×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உஷார்.. தனியாக வீட்டிலிருக்கும் பெண்கள் தான் டார்கெட்.. கொலை செய்து சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த சைக்கோ..! அதிர்ச்சி சம்பவம்..!!

உஷார்.. தனியாக வீட்டிலிருக்கும் பெண்கள் தான் டார்கெட்.. கொலை செய்து சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த சைக்கோ..! அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து, உல்லாசம் அனுபவித்து வந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அனகாபள்ளி மாவட்டத்தை ‌ சேர்ந்தவர் சந்தகராம்பாபு. இவரது மனைவிக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ராம்பாபு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக அவரை பிரிந்துள்ளார்.

இந்த நிலையில் தான் பணிபுரிந்த ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளராலும் ராம்பாபு ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று அடுத்தடுத்து ஏமாற்றம் ஏற்பட்டதால் ராம்பாபு தனிமையிலிருந்து பைத்தியம் போல மாறியுள்ளார்.

மேலும் வீட்டில் தனித்தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொலை செய்து, உல்லாசம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின் பெயரில் ராம்பாபுவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மனைவி ஏமாற்றியதால் பெண்களின் மீது கோபம் ஏற்பட்டு, தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொலை செய்ததும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது என விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra #Visakhapatnam #men #Saiko #Rape #Victim
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story