×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை; சேலையை அவிழ்த்து அரை நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட இளம்பெண்.!

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை; சேலையை அவிழ்த்து அரை நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட இளம்பெண்.!

Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து குஜராத் மாநிலத்தில் சூரத் நகருக்கு இளம்பெண் தனது உறவினருடன் பயணம் செய்தார். இவர்கள் இருவரும் முசாபர்நகரில் இருந்து சூரத் நோக்கி பயணிக்கும் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, இரயிலில் பயணம் செய்த 5 இளைஞர்களுக்கும், இளம்பெண்ணுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்ணை ஐவராக சேர்ந்து கும்பல் பாலியல் தொல்லைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. 

இதனை தட்டிக்கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், வேறு இருக்கைக்கு செல்ல முயன்ற இளம்பெண்ணை தாக்கி, சேலையை அவிழ்த்து ஓடும் இரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர். சில மீட்டர் தொலைவில் பெண்ணின் உறவினரும் தூக்கி வீசப்பட்டுள்ளார். 

மறுநாள் காலையில் அவ்வழியே சென்ற கிராம மக்கள் இருவர் படுகாயமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் வாக்குமூலத்தை பெற்று ஐவர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#குஜராத் #ஜார்கண்ட் #Jharkhand train #girl harassment #Crime news #கிரைம் செய்திகள் #Sexual Harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story