பகீர் செய்தி.! ஆனந்த் அம்பானி திருமணத்தில் 10 லட்சம் கொள்ளை.!! திருச்சியை சேர்ந்த நூதன கொள்ளையர்கள் கைது.!!
பகீர் செய்தி.! ஆனந்த் அம்பானி திருமணத்தில் 10 லட்சம் கொள்ளை.!! திருச்சியை சேர்ந்த நூதன கொள்ளையர்கள் கைது.!!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமண விழாவின்போது கொள்ளையில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்லாயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.