தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI செலுத்த தேவையில்லை.! வங்கிகள் கடன் வசூல் செய்ய கூடாது..!ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு.!

RBI governor announced no EMI for next 3 months

RBI governor announced no EMI for next 3 months Advertisement

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

corono

கொரோனாவின் இந்த கோரத்தாண்டவத்தால் உலகளவில் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்துவருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் கூலித் தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு பிரதம மந்திரியின் நிதியில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை தொகுப்பு ஒதுக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனை அடுத்து, வாடிக்கையாளர்கள் வங்கியில் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வசூலிக்க ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை. மேலும், இதனை காரணம் காட்டி வாடிக்கையாளர்களின் சிபெல் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #No EMI
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story