வயலுக்குள் புகுந்து வழுக்கட்டாயமாக இளம்பெண்ணை பைக்கில் தூக்கி சென்ற 30 வாலிபர்கள்...! பட்டப்பகலில் நடந்த பகீர் காட்சி!!!
மத்திய பிரதேசத்தின் ராஜ்பூரில் இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது. பழங்குடியின திருமண வழக்கம் பின்னணியாக கூறப்படும் நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் பலர் முன்னிலையில் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் Viral Video சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காட்சி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வயலில் இருந்து இளம்பெண்ணை அழைத்துச் சென்ற காட்சி
தகவலின்படி, சுமார் 25 முதல் 30 பேர் கொண்ட இளைஞர் குழு சம்பவ இடத்தில் திரண்டிருந்தது. அவர்களில் சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விவாதம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!
பழங்குடியின வழக்கமே காரணமா?
விசாரணையில் வெளியாகிய தகவலின்படி, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிஹாலி கிராமத்தைச் சேர்ந்த ஹுகும் ராவத் என்பவருடன் திருமணம் நடைபெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பழங்குடியின சமூகத்தில் பின்பற்றப்படும் பேஜா என்ற வழக்கத்தின்படி, மணமகன் தரப்பினர் மணமகள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கியிருந்தனர். ஆனால், அதன் பிறகும் இளம்பெண் கணவர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது மனைவியை அழைத்து வர நண்பர்களுடன் ஹுகும் ராவத் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரல் வீடியோ அடிப்படையில் போலீஸ் விசாரணை
கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் இதுவரை இரு தரப்பிலிருந்தும் காவல் துறையில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு ராஜ்பூர் போலீஸார் தாமாகவே விசாரணையை தொடங்கியுள்ளனர். பாரம்பரிய வழக்கங்கள் இருந்தாலும், சட்டத்திற்கு முரணான வகையில் ஒருவரை கட்டாயமாக அழைத்துச் சென்றது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.