×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தடியடி! ரஜினிகாந்தின் நாசூக்கான பதிலால் செம ஷாக்கான ரசிகர்கள்!!

rajini answered about delhi students attack by police

Advertisement

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா-உத்தர பிரதேச அலிகர் பல்கைலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளிவரவிருக்கும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து படம் இந்தியிலும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. 

அப்பொழுது பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும்,  டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் இது சினிமா விழா. இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை. மேலும் அதனை பேசுவதற்கு இது சரியான தளம் இல்லை என நாசுக்காக பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ள நிலையில் இவ்வாறு பதில் அளித்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi student #attack #rajinikanth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story