#Video: இரயிலை நிறுத்தி நொறுக்குத்தீனி வாங்கிய எஞ்சின் ஓட்டுநர்.. 5 பேர் பணியிடைநீக்கம்.!
#Video: இரயிலை நிறுத்தி நொறுக்குத்தீனி வாங்கிய எஞ்சின் ஓட்டுநர்.. 5 பேர் பணியிடைநீக்கம்.!
ஜெய்ப்பூர் சரக இரயில்வே துறை பணியாளர்கள் செய்த சர்ச்சை சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டத்தில் பணியாற்றி வரும் இரயில் எஞ்சின் ஓட்டுநர், இரயிலை நிறுத்திவிட்டு கசோரி (kachori) உணவை வாங்கி வந்து மீண்டும் இரயிலை இயக்குகிறார்.
மேலும், இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இரயில்வே கேட் போடப்பட்டு இருந்ததால், மக்கள் சிலமணித்துளிகள் தேவையில்லாமல் காத்திருக்க நேர்ந்தது.
இரயில்வே ஓட்டுநர் விதிமுறைப்படி மேற்கூறிய குற்றம் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகவே, ஜெய்ப்பூர் இரயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், இரயில் ஓட்டுநர் கசோரி வாங்க இரயிலை நிறுத்தியது உறுதியாகவே, 2 இரயில் ஓட்டுனர்கள் மற்றும் 2 கெட்மென் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362