ரௌடியை ரவுண்டுகட்டி துடிதுடிக்க கொலை செய்த கும்பல்.. ஆஸ்பத்திரியில் கலவரத்தில் ஈடுபட்ட குட்டி சுள்ளான்கள்.! கல்வீசி தாக்குதல்.!!
ரௌடியை ரவுண்டுகட்டி துடிதுடிக்க கொலை செய்த கும்பல்.. ஆஸ்பத்திரியில் கலவரத்தில் ஈடுபட்ட குட்டி சுள்ளான்கள்.! கல்வீசி தாக்குதல்.!!
கேங்ஸ்டராக வலம்வந்தவனை 6 பேர் கும்பல் கொலை செய்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அவனின் ஆதரவாளர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராவத்பட்டா பகுதியில் வசித்து வருபவன் தேவா குர்ஜார். இவன் அப்பகுதியில் தௌலத்தன ரௌடி போலவும், இவனுக்கு கீழ் பல பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் என பலரை வைத்து ரௌடிசம் செய்து வந்ததால் ரௌடிகளுக்கெல்லாம் தலைவன் போலவும் இருந்து வந்துள்ளான்.
இவனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரூ.10 இலட்சம் கேட்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் தேவா புகார் அளித்துள்ளான். இந்த நிலையில், நேற்று அங்குள்ள கோவில் அருகே நின்றுகொண்டு இருந்த தேவாவை, 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதத்தால் தாக்கி, சல்லிசல்லியாக வெட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தேவா கொலை செய்யப்பட்டதை அறிந்து குவிந்த அவனின் ஆதரவாளர்கள், மருத்துவமனை வளாகத்தில் திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த தருணத்தில், அக்கும்பல் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, தேவாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் மீது ரௌடி கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362