பகைக்கு பச்சிளம் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு... பெத்த தாய்க்கே தெரியாமல் 2 மாத குழந்தையிடம் அத்தை செய்த கொடூரம்! கேமராவில் சிக்கிய அந்த காட்சி!!!
ராஜஸ்தானில் 2 மாத பெண் குழந்தையை கொடூரமாகத் தாக்கியதாக சொந்த அத்தை கைது செய்யப்பட்டுள்ளார். அறையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 2 மாத பெண் குழந்தையை கொடூரமாகத் தாக்கியதாக சொந்த அத்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குழந்தை துன்புறுத்தல் தொடர்பான இந்த வழக்கு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடலில் காயங்களைக் கண்டு சந்தேகம்
தகவலின்படி, குதா கோர்ஜி பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 2 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுது வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாய், குழந்தையின் உடலை பரிசோதித்தபோது பல இடங்களில் நகக்கீறல்கள் மற்றும் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கணவரின் சகோதரி மீது சந்தேகம் இருந்தாலும், உறுதியான ஆதாரம் இல்லாததால் உடனடியாக குற்றம் சாட்டாமல் உண்மையை கண்டறிய முடிவு செய்தார்.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
ரகசிய கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி
இதையடுத்து, குழந்தை இருந்த அறையில் ரகசியமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. கேமரா இருப்பதை அறியாத அந்தப் பெண், பின்னர் அறைக்குள் சென்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் காலை கொடூரமாகத் திருகி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.
ஆதாரத்தின் அடிப்படையில் கைது
காட்சிகளைப் பார்த்த குழந்தையின் தாய் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் CCTV ஆதாரம் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பகை மற்றும் பொறாமை காரணமாக இந்தச் செயல் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.