9 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, 12 ஆம் வகுப்பு மாணவனால் பலாத்காரம்.. காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பயங்கரம்.!
9 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, 12 ஆம் வகுப்பு மாணவனால் பலாத்காரம்.. காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பயங்கரம்.!
பள்ளிக்கு சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 12 ஆம் வகுப்பு மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் மாவட்டம், பிச்சிவாரா கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 24 ஆம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர், சிறுமியை உணவு இடைவெளியின் போது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
சிறுமி பனிரெண்டாம் வகுப்பு மாணவருடன் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், நண்பன் என்ற நம்பிக்கையில் உடன் சென்றுள்ளார். ஆனால், காம எண்ணத்துடன் பழகிய மாணவன், சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், மாலை நேரத்தில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, அவரின் வீட்டருகே வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவனை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், மாணவனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362