×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா பரவலை தடுக்க ஒரே தீர்வு இது தான்.! ராகுல் காந்தி என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாள

Advertisement

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனாலும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத அம்சத்துடன் கூடிய முழு ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலை தடுப்பதற்கான ஒரே வழி. மத்திய அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களைக் கொல்கிறது ” என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #rahul gandhi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story