×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடன் வாங்கி வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மகன்.. பிணமாக மாறிய சோகம்.. அரசுக்கு தந்தை கண்ணீர் கோரிக்கை.! 

கடன் வாங்கி வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மகன்.. பிணமாக மாறிய சோகம்.. அரசுக்கு தந்தை கண்ணீர் கோரிக்கை.! 

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கானூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பு குர்த் எனும் பகுதியைச் சேர்ந்த மண்ஜோத் சிங் என்ற 19 வயது மாணவர் மேற்படிப்புக்காக கனடாவில் இருக்கும் சர்ரே நகருக்கு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்றுள்ளார். முதல் நாள் வகுப்புக்கு சென்ற அந்த மாணவர் கல்லூரியில் இருக்கும் கழிப்பறைக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் பற்றி அவருடைய தந்தை பேசுகையில், "கனடாவில் வசிக்கும் எங்கள் மருமகனிடம் மகன் மஞ்சோத் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த உடலை இந்தியாவிற்கு கொண்டுவர 18 முதல் 20 லட்சம் வரை செலவாகும் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே அதிகப்படியாக பல லட்சம் கடனை வாங்கி தான் வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்தேன். இப்போது, அந்த உடலை கொண்டு வர எங்களிடம் பணம் இல்லை. எனவே, எங்களுக்கு மத்திய மாநில அரசு உதவ வேண்டும்." என்று கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த மாணவர் கனடாவிற்கு மேற்படிப்புக்காக சென்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மரணித்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Canada #death #heart attack #punjab student
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story