தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை கடத்திச்சென்ற காதலனை காத்திருந்து கொலை செய்த பெண்ணின் பெற்றோர்.. கொலை செய்து உடல் ஆறில் வீசியது அம்பலம்.!

மகளை கடத்திச்சென்ற காதலனை காத்திருந்து கொலை செய்த பெண்ணின் பெற்றோர்.. கொலை செய்து உடல் ஆறில் வீசியது அம்பலம்.!

Pune Ahamad Nagar Man Killed due to Love Advertisement

மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கடத்தி சென்ற காதலன், பெண்ணின் பெற்றோரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, அகமதுநகர் மாவட்டம் ஸ்ரீராம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தீபக் (வயது 31). இதே கிராமத்தில் வசித்து வரும் மாற்று மதத்தை சேர்ந்த பின்னுக்கும், தீபக்கிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக பெண்ணை தீபக் கடத்தி சென்றதாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த பெற்றோர் மகளை மீட்டு சென்றுள்ளனர். கடந்த 30 ஆம் தேதி வேலைக்கு புனே சென்ற தீபக், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த தீபக்கின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணின் தந்தை உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது, தீபக்கை கடத்தி கொலை செய்து, அவரின் உடலை கோதாவரி ஆற்றில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல அமைதியாக இருந்தது அம்பலமானது. இவ்வழக்கில் தீபக்கின் தந்தை உட்பட 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். தீபக்கின் உடலை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai #Pune #Murder #police #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story