×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் உன் மாமன், நான் செய்றதை யாருட்டையும் சொல்லாத" - சிறுமியிடம் அத்துமீற முயன்றவன் போக்ஸோவில் கைது.!

நான் உன் மாமன், நான் செய்றதை யாருட்டையும் சொல்லாத - சிறுமியிடம் அத்துமீற முயன்றவன் போக்ஸோவில் கைது.!

Advertisement

வீட்டின் சுவரை ஏறிக்குதித்து தனியே இருந்த சிறுமியிடம் அத்துமீற முயற்சித்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கறைகள், பிள்ளைத்தெருவாசல் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மகன் வெங்கடேஷ் (வயது 25). இவர் தனியார் கப்பல் துறைமுகத்தில் கூலியாக பணியாற்றி வருகிறார். 

இங்குள்ள கலைஞர் நகரில், 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டின் மதில்சுவரை ஏறிக்குதித்த வெங்கடேஷ், வீட்டில் தனியே இருந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். 

மேலும், சிறுமியிடம் நான் உனக்கு மாமன் முறை, நான் செய்வதை யாரிடமும் சொல்லாதே என கையை பிடித்து இழுக்கவே, பதறிப்போன சிறுமி சுதாரித்து சத்தமிட்டுள்ளார். சிறுமியின் வாயை மூடிய வெங்கடேஷ் அத்துமீறி நடந்துள்ளார்.

சிறுமியின் அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிடவே, வெங்கடேஷ் சுவரை ஏறிக்குதித்து தப்பி சென்றுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வீட்டிற்கு வந்து விசாரித்து காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pondicherry #puducherry #Karaikal #Sexual Harassment #police #pocso
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story