×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஜன்னலில் அயர்ந்து தூங்கிய திருடன்..! பதறிப்போன பொதுமக்கள்.!

பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஜன்னலில் அயர்ந்து தூங்கிய திருடன்..! பதறிப்போன பொதுமக்கள்.!

Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன்.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறும். அந்த கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழா கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது முடிந்தது.

திருவிழாவின்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர். அதனை கொள்ளையடிப்பதற்காக பிளான் போட்டு நேற்று இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளான்,

பின்னர், கோவில் கருவறையில் இருந்த நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வர முயற்சித்துள்ளான். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே அயர்ந்து தூங்கியுள்ளான்.

இதனையடுத்து இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டு அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#theft #temple
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story