×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்! கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு!

problem in assam

Advertisement


அசாம் மாநிலத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த பகுதி கலவர பூமி போல் காட்சி அளிக்கின்றது.

அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி நகரில் காளி பாரி என்னும் இடத்தில், ஒருபிரிவினர் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன்முறை பெருமளவில் வெடித்ததால், ராணவத்தின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அங்கு நடந்த கலவரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 15பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#144 #fight
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story