×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Advertisement

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள பொம்மேனஹள்ளியை சேர்ந்த 22 வயதான சௌமியா என்ற இளம் பெண்ணுக்கும், 40 வயதான பிரசாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தன்னைவிட 18 வயது மூத்தவரை திருமணம் செய்ததால் சௌமியா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சௌமியா கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் பிரசாத்துக்கும், சௌமியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சௌமியா நேற்று வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் சௌமியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே எங்கள் மகளை கொலை செய்து விட்டதாக சௌமியாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சாமியாரின் கணவர் பிரசாத் மற்றும் அவரது மாமனார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு சௌமியா எப்படி உயிரிழந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #pregnant women #Crime #hanged
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story