×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

6 வயது குழந்தை கண்முன்னே துடிதுடிக்க கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான பதற வைக்கும் சம்பவம்!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி நகரின் அருகேயுள்ள சுபாஷ் நகர் என்ற பகுதியில் வசித்து வந்தவர

Advertisement

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி நகரின் அருகேயுள்ள சுபாஷ் நகர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வினிதா. 26 வயது நிறைந்த கர்ப்பிணிப் பெண்ணான அவர் தனது கணவர், 6 வயது மகள் மற்றும் மாமியாருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் நர்சாக பணியாற்றி வரும் அவரது மாமியாரும் இரவு பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வினிதா தனது 6 வயது மகளுடன் இரவில் தனியாக இருந்துள்ளார். மறுநாள் காலை அவரது மாமியார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வினிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவரது அருகே 6 வயது மகள் அழுதுகொண்டே உட்கார்ந்து இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது குழந்தையிடம் இதுகுறித்து விசாரித்தபோது, அன்று இரவு வினிதாவின் கணவரது தம்பியான ஆகாஷ் குமார் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து வினிதாவுடன் தகராறு செய்துள்ளார். அப்பொழுது வாக்குவாதம் அதிகரிக்கவே ஆவேசமடைந்த ஆகாஷ் குமார் அம்மிக்கல்லை தூக்கி போட்டு வினிதாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆகாஷ் குமாரை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #pregnant women
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story