காதலில் விழுந்த சாமியார்!..கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலியுடன் ஓட்டம்!.. பரபரப்பில் மடம்..!
காதலில் விழுந்த சாமியார்!..கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலியுடன் ஓட்டம்!.. பரபரப்பில் மடம்..!
கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூர் பகுதியில் குத்தகே மடம் உள்ளது. இந்த மடத்தில் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்ற ஹரீஷ். இவர் மடத்தில் இருந்து சாமியார் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சாமியார் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஓடிப்போன சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ஒரு சாமியாராக என்னால் வாழ்க்கையை தொடர முடியவில்லை. நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும், இதன் காரணமாக மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்தேன். என்னை யாரும் தேட வேண்டாம். வேறு எங்காவது சென்று நிம்மதியாக வாழ முடிவெடுத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதே சாமியார் இதற்கு முன்பும் மடத்தில் இருந்து ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362