×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேகத்தில் அசால்ட் பயணம்; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்.!

அதிவேகத்தில் அசால்ட் பயணம்; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்.!

Advertisement

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு பகுதியான கோட்டக்குப்பம், கீழ்புத்துபட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மீனா கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தை சேர்ந்த மீனவ பெண்கள், புதுச்சேரிக்கு சென்று மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருவது வழக்கம். 

இந்நிலையில், இன்று காலை லட்சுமி (வயது 45), கோவிந்தம்மாள் (வயது 50), கமல், கெங்கையம்மாள், பிரேமா உட்பட 6 பேர் ஷேர் ஆட்டோவுக்கு காத்திருந்துள்ளனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக பயணம் செய்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெண்களின் மீது புகுந்தது. 

இந்த சம்பவத்தில் லட்சுமி, கோவிந்தம்மாள் ஆகிய 2 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கெங்கையம்மாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். எஞ்சியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரில் பயணம் செய்த விக்னேஸ்வரன், கெளதம், சேது உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Accident news #Latest news #புதுச்சேரி #puducherry #இந்தியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story