குடிச்சிட்டு வாரியே, பிள்ளைங்க எதிர்காலம் என்னவாகும்? - ஒத்த வார்த்தையில் தொங்கி உயிரைவிட்ட சோகம்,!
குடிச்சிட்டு வாரியே, பிள்ளைங்க எதிர்காலம் என்னவாகும்? - ஒத்த வார்த்தையில் தொங்கி உயிரைவிட்ட சோகம்,!
மனைவி கூறிய ஒற்றை அறிவுரையால் மனமுடைந்துபோன கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 42). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேவதி. இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் மேலையூரில் வேலைக்கு சென்ற ரேவதியை வீட்டிற்கு அழைத்து வந்த இளங்கோவன், கடைக்கு சென்று மதுபானம் அருந்திவிட்டு வந்துள்ளார். மேலும், மனைவி, குழந்தைகளிடம் சண்டையிட்டு இருக்கிறார்.
அப்போது ரேவதி, "பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில், பொறுப்பில்லாமல் குடித்துக்கொண்டு இருக்கிறாயே, அவர்களின் எதிர்காலம் என்னாகும்?" என அறிவுரை கூறியுள்ளார். இதனால் இளங்கோவன் பெரும் விரக்திக்கு சென்றுள்ளார்.
மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இளங்கோவன், மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இளங்கோவனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் இளங்கோவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளங்கோவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக திருப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362