×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேஸ் போட மாட்டேன்..! தனியா வீட்டுக்கு வரியா..? இளம் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்.!

Police SI arrested who misbehaved with girl

Advertisement

மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் தந்தையுடன் சேர்த்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட இளம் பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளம் அருகே உள்ளது துங்கபேட்டா கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவருபவர் அப்பாராவ். இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் அவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்தபோது அப்பாராவின் மகளை அங்கிருந்த உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தந்தை மகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அப்பாராவின் மகளிடம் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் தந்தை மகள் இருவரும் வீட்டிற்க்கு வந்த சிறிது நேரத்தில்  உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா அந்த பெண்ணிற்கு போன் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தனது வீட்டிற்கு தனியாக வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா பேசிய அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா பேசிய உரையாடல்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Police crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story