22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.!
சிறார்கள், இளைஞர்களை வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பணம் தருவதாக சிறார்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இளைஞரின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.
இளைஞர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்டம், ரைசிங்ப்பூரா பகுதியில் வசித்து வருபவர் சேத்தன் பிரகாஷ் கோலி (வயது 22). இவர் சிறார்களுக்கு பணம் தருவதாக ஆசை காண்பித்து, தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.!
வீடியோ:
இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, கடந்த 2022 ம் ஆண்டு முதல் 2026 ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து இருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஆய்வு:
இந்த தகவலின் பேரில் குற்றவாளியுடைய செல்போனை ஆய்வு செய்ததில் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஆபாச விடியோக்கள், புகைப்படங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து, செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் கொடூரம்..!