×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவிகளா.. உணவில் விஷம் கலந்து 60 நாய்களை கொன்ற மக்கள்; மனிதாபிமானமின்றி செய்த கொடூரம்.!!

பாவிகளா.. உணவில் விஷம் கலந்து 60 நாய்களை கொன்ற மக்கள்; மனிதாபிமானமின்றி செய்த கொடூரம்.!!

Advertisement

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாலிகொண்டா பகுதியில் இருக்கும் அருரு கிராமத்தில் தெரு நாய்கள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்நிலையில் தெருநாய்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து குழந்தைகள், வாகன ஓட்டிகளை அவ்வப்போது துரத்தி தாக்கி வந்துள்ளது.

இதனால் அந்த கிராமத்தில் பயணம் செய்வோர் மிகுந்த பயத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து கிராமத்தில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் கலந்த உணவு வழங்கி இருக்கின்றனர். 

விஷம் கலந்த உணவை அறியாமல் சாப்பிட்ட நாய்களும் பரிதாபமாக ஆங்காங்கே உயிரிழந்து கிடந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #Latest news #Dog killed #தெலுங்கானா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story