×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனுடன் சேர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெற்றோர்! பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!

parents wrote exam with son

Advertisement


கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான முஸ்தபா என்பவருக்கு 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவியான நுசைபா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது  திருமணத்தால் படிப்பு வீணாகி விட்டதே என்ற கவலையுடன் வாழ்ந்து வந்துள்ளார் நுசைபா. அதேபோல் முஸ்தபாவும் 10 ஆம் வகுப்போடு அவரது பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் தனது  மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அதேபோல் தானும் 12 ஆம் வகுப்பு தேர்வை எப்படியாவது எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதனையடுத்து பயிற்சி மையங்களை அணுகத் தொடங்கினார். ஆனால், பயிற்சி மையங்கள் அவர்களுக்கு உதவவில்லை. இதனையடுத்து கேரள எழுத்தறிவு மையத்தின் சமநிலைத் தேர்வுகள் குறித்து அவர்களது ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையைப் பார்த்து அதனை பின்பற்றியுள்ளனர்.


 
முஸ்தபா- நுசைபா தம்பதியின் மகனும் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்தநிலையில் தனது மகனோடு12 ஆம் வகுப்பு தேர்வெழுதி பெற்றோர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள்  பட்டப்படிப்பை தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த பெற்றோர்களை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#12 th exam #parents
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story