×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறும் ரூ.1.5 லட்சத்துக்காக 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!

உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணாஜில் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 3 மாதம் ஆன ஆண் குழ

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணாஜில் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 3 மாதம் ஆன ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு தங்களது குழந்தையை விற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு திடீரென வந்த குழந்தையின் தாத்தா குழந்தை எங்கே என கேட்டுள்ளார். 

இதனையடுத்து குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாத்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.

குழந்தை இல்லாமல் எத்தனையோ பெற்றோர்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில், ஒரு கார் வாங்க, அதுவும் வெறும் ரூ.1.5 பணத்துக்காக தனது சொந்த குழந்தையையே விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child sale #parents
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story