×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரேக்கிங் நியூஸ்: திகார் சிறையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் விடுதலையாகிறார் ப. சிதம்பரம்!

P chithamabaram releasing from jail

Advertisement

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததில் முறைகேடு நடந்தாக கூறி  டந்த ஆகஸ்ட் 21-ந் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ப. சிதம்பரம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சிறையில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதனால் ஜாமீன் கிடைத்தும் அவரால் வெளியே வரமுடியவில்லை.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்ச நீதிமாற்றத்தில் ப. சிதம்பரம் சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இன்று அந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்து ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று மாலை திகார் சிறையில் இருந்து ப. சிதம்பரம் விடுதலையாகி இன்னும் சற்று நேரத்தில் வெளியேவர இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pa chithambaram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story