×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீ என்னுடன் உல்லாசமாக இல்லாவிட்டால் உன்கணவனை அவ்வாறு செய்திடுவேன் என மிரட்டியே பலாத்காரம் செய்த பெண்ணின் மாமா!.

திருமணமான பெண்ணை அவரின் சொந்த மாமா மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய பெண்ணுக்கு, 59 வயது நிரம்பிய யோகேஷ் என்பவர் மாமா உறவு முறையாவார். அவர் அந்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

மாந்ரீகம், பில்லி, சூனியம் போன்ற விஷயங்களை செய்து வந்த யோகேஷுக்கு அந்த பெண் மீது தவறான பார்வையால் அந்த பெண்ணிடம் சென்று உன் கணவருக்கு பில்லி சூனியம் வைத்துள்ளேன் என்று கூறி அந்த பெண்ணை மிரட்டி இரு முறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னை சீரழித்த மாமா முறையான யோகேஷ் என்பவரை பற்றி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தன்னை கைது செய்ய வருவார்கள் என முன்கூட்டியே அறிந்த உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதுபோல் நடித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் வருவதற்கு முன்னரே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி யோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யோகேஷ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை கைது செய்வோம் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#raped #young girl #old man
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story