×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளையும், பேத்தியையும் பாலியல் வன்புணர்வு செய்து வந்த 65 வயது காமுகன்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை அளித்

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை, தன்னை 15 வயதாக இருக்கும் போதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனக்கு திருமணம் ஆன போதிலும் அவர் தொடர்ந்து சித்ரவதை செய்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில், தான் இவ்வாறு நடந்துகொண்டதை யாரிடமாவது கூறினால் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என தந்தை மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் மகளை(பேத்தியை) துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரது தந்தையை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த குற்றத்தில் அனைத்து ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமானதால், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு 75,000 ரூபாயும் இழப்பீடு தொகையுடன் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#old man #abused
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story