×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

79 நாட்கள் அடைத்துவைத்து பெண் பலாத்காரம்.. கணவனை ஏமாற்றி, மந்திரவாதி பகீர் செயல்.. பதறவைக்கும் சம்பவம்.!

79 நாட்கள் அடைத்துவைத்து பெண் பலாத்காரம்.. கணவனை ஏமாற்றி, மந்திரவாதி பகீர் செயல்.. பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

ஒடிசா மாநிலத்தில் உள்ள பால்சோர் மாவட்டத்தில் பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில், திருமணம் ஆனதில் இருந்து மனைவியால் பிரச்சனை வருகிறது என எண்ணிய கொடூர கணவன், அதற்காக மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டுள்ளான். 

அவனோ பெண்ணை எனது இல்லத்தில் தங்கவைத்து மாதக்கணக்கில் பூஜை செய்தால் அனைத்தும் சரியாகும் என்று கூறவே, முட்டாள் கணவனோ மந்திரவாதியின் வீட்டில் மனைவியை வலுக்கட்டாயப்படுத்தி விட்டு வந்துள்ளான். மேலும், அவரின் குழந்தையையும் உடன் இருக்க வைத்துள்ளான். 

மந்திரவாதி பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வந்து பாலியல் ரீதியாக சித்ரவதைபடுத்திய நிலையில், மொத்தமாக 79 நாட்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், பெண் மற்றும் குழந்தைக்கு தேவையான உணவை வழங்கி, கத்தி முனையில் சாப்பிட வைத்து பலாத்கார சம்பவமும் நடந்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண்மணி அவனின் பிடியில் இருந்து தப்பித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே, பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணை மீட்ட நிலையில், தலைமறைவான சாமியாரை தேடி வருகின்றனர். மேலும், பெண்ணின் கணவன், அவனின் சகோதரர், தாய் - தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisha #Rape #sexual #sexual abuse #police #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story