×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

48 ஆண்டுகளில் 1,2...அல்ல 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது...

48 ஆண்டுகளில் 1,2...அல்ல 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது...

Advertisement

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 48 ஆண்டுகளில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குறித்த நபர் முதலில் 1982 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை மணந்துள்ளார். பின் அந்த பெண்ணுக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். 

அதனையடுத்து அந்த நபர் தான் ஒரு டாக்டர் என கூறி விவாகரத்தான பணக்கார பெண்களை திருமண இணைய மூலம் சந்தித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கடைசியாக 14 ஆவதாக டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில் அவரை பற்றிய உண்மை அந்த பெண்ணுக்கு தெரிந்துள்ளது. உடனே அந்த நபர் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்‌.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisa #14 girls #Married
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story