பள்ளிக்கு சென்ற UKG மாணவன் வீடு வரல...என் பிள்ளை எங்கே.? பள்ளியில் போய் கதறிய பெற்றோர்! 25கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி!!!
நோய்டா அமிட்டி சர்வதேசப் பள்ளியில் UKG மாணவன் 7 மணி நேரம் பேருந்தில் பூட்டப்பட்ட சம்பவம். பெற்றோரில் அதிர்ச்சி, பாதுகாப்பு குறைபாடு கேள்விக்குறி.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விக்குறி எழும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் நோய்டாவில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் பள்ளிப் பேருந்துக்குள் சுமார் ஏழு மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பேருந்தில் தூங்கிய மாணவன்
நோய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேசப் பள்ளியில் UKG படிக்கும் மாணவன் ஒருவர், காலை பள்ளிக்கு சென்றபோது பேருந்தில் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இறங்கியபோது, அவர் விழிக்காமல் இருந்ததால் பேருந்து பணியாளர்கள் கவனிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
7 மணி நேரம் பூட்டப்பட்ட அதிர்ச்சி
மாலை பள்ளி முடிந்தும் மகன் வீடு திரும்பாததை கவனித்த தாய் பதற்றமடைந்து பள்ளிக்கு விரைந்தார். “நானே பேருந்தில் ஏற்றினேன், என் மகன் எங்கே?” என்ற அவரது கேள்வி பள்ளி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பள்ளியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் சிறுவன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 7 மணி நேரம் அந்த சிறுவன் உள்ளே பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு
நல்ல விஷயமாக, அந்த மாணவன் உயிருடன் மீட்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பேருந்து உதவியாளரின் கவனக்குறைவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்து பெற்றோர்கள் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம், பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என சமூக வலைதளங்களிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.