தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம் - மத்திய அமைச்சர் விளக்கம்

no relation with central govt for petrol hike

no-relation-with-central-govt-for-petrol-hike Advertisement

பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. சில மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தன.

bharath banth

பீகார், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பந்த் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இருப்பினும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றியடையவில்லை. போராட்டம் அறிவித்த இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வையே கண்டது.

இந்த போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற  வன்முறைகளுக்கு ஆளும் பாஜக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதைப்பற்றி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கஷ்டமான நிலை இருந்தபோதிலும் மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதில் பா.ஜனதா வலுவான நம்பிக்கையை கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் விரக்தியால் போராட்டம் நடக்கிறது. முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் இல்லையென்று மக்களுக்கு தெரியும், வெளிக்காரணி காரணமாகவே விலை உயர்வு உள்ளது. முழுஅடைப்பு போராட்டத்தில் மக்கள் ஏன் வேற்றுமையை கொண்டிருக்கிறார்கள்? விலை உயர்வு தற்காலிகமாக இருந்தாலும், அவைகளுக்கான காரணிகள் இந்திய அரசிற்கு அப்பாற்பட்டது என்று அவர்களுக்கு தெரியும். எல்லோருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது, ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம் ஜகானாபாத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று போராட்டம் காரணமாக மருத்துவமனை நோக்கி செல்ல முடியாததால் குழந்தை உயிரிழந்து உள்ளது. அதற்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bharath banth #petrol diesel price hike #congress banth #minister ravishankar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story