×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெலுங்கானா, ஆந்திராவில் 60 இடங்களில் தொடரும் அதிரடி சோதனை: என்.ஐ.ஏ அதிகாரிகள் தடாலடி.!

தெலுங்கானா, ஆந்திராவில் 60 இடங்களில் தொடரும் அதிரடி சோதனை: என்.ஐ.ஏ அதிகாரிகள் தடாலடி.!

Advertisement

 

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட இடத்தில் இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்சல் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் காலை முதலாக நடத்திவரும் சோதனை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் பரபரப்பு சூழல் உருவாகியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், நெல்லூர், திருப்பதி மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனையின் முடிவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் நடவடிக்கைக்கான காரணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக விபரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NIA #Telangana #Andhra Pradesh #ஆந்திர பிரதேசம் #தெலுங்கானா #என்ஐஏ #தேசிய புலனாய்வு முகமை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story