×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்தபின் மணமகள் எடுத்த திடீர் முடிவு... பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

திருமணம் முடிந்தபின் மணமகள் எடுத்த திடீர் முடிவு... பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Advertisement

திருமண நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த மணமகள், திருமணம் முடிந்தவுடன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெஹபூப் நகர் பாத்தாதோட்டா பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி. இவருக்கும் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவருக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

இதற்கிடையில் இரவு திருமண சடங்குகள் மற்றும் பாட்டு கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் போன்றவை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், நடன நிகழ்ச்சிகளில் மணமகன் மல்லிகார்ஜுனாவுடன், மணமகள் லட்சுமி மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து, கழிவறைக்கு சென்ற மணப்பெண் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ந்துபோன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் லட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என லட்சுமி கூறியதும், ஆனால் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்து மணமகள் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்த நிலையில், காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #Women #dead #suicide #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story