×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பர்களின் பேச்சை கேட்டு வயாகரா எடுத்துக்கொண்ட புதுமாப்பிள்ளை.. உடலுறவின்போது ஏற்பட்ட விபரீதம்…!

நண்பர்களின் பேச்சை கேட்டு வயாகரா எடுத்துக்கொண்ட புதுமாப்பிள்ளை.. உடலுறவின்போது ஏற்பட்ட விபரீதம்…!

Advertisement

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையே, இவருக்கு தாம்பத்ய குறைபாடு இருந்துள்ளதால், நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலின் படி, வயாக்ரா மாத்திரையை எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், வயாக்ரா மாத்திரை பலன் அளிப்பதாக நம்பி அடிக்கடி எடுத்துக் கொண்டதுடன் அளவுக்கு அதிகமகவும் எடுத்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் விமலின் பிறப்புறுப்பில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.

மேலும், பிறப்புறுப்பு தொடர்ச்சியாக விரைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் பிறப்புறுப்பில், அறுவை சிகிச்சை செய்து வலியை குறைத்தனர்.

அவரது பிறப்பொறுப்பின் விரைப்புத்தன்மையை குறைக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. வாழ்நாள் முழுக்க இனி பிறப்புறுப்பு விறைப்பாக இருக்கும் எனவும் விரைப்புத் தன்மையை மறைக்க இறுக்கமான உள்ளாடையை அணிந்துகொள்ளவேண்டும் எண்றும் கூறியுள்ளனர்.

இருந்த போதும், குழந்தைகள் பெற்றுக்கொண்டு வழக்கமான வாழ்க்கையை தொடரமுடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நண்பர்களின் பேச்சைக் கேட்டு புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viagra #Viagra Tablet #Uttar pradesh #Newly Weds Groom
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story