×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!. அதிர்ச்சி காரணம்!.

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!. அதிர்ச்சி காரணம்!.

Advertisement

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மாதீன். இவருக்கும்  சூலுரு பகுதியை சேர்ந்த முபீனா என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் திருமணம் நடந்த தினத்திலிருந்தே மணமகன் மிகவும் சோகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மணமகனின் தாயார், மகனிடம் விசாரித்துள்ளார். மகன் தாயிடம் மிகவும் வருத்தத்துடன், மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து மகனுக்கு ஆறுதல் கூறி மருமகளை அழைத்துக் கொண்டு தோல் நோய் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பற்றி விசாரித்துள்ளார். ஆனாலும் தன் மகன் சந்தோசமாக இல்லை என தாயாருக்கு தெரியவந்தது. 

இதனிடையே இறுதினங்களுக்கு முன்  நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுமாப்பிள்ளையை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடிய குடும்பத்தினர், அவரது மொபைலில் அழைத்துள்ளனர்.  பின்னர் மாதீன் தற்கொலை செய்துகொண்ட தகவல் வந்தது. அதனை கேட்ட மாதீன் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது மாதீன் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #newly married #beauty problem
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story